உண்டியல் கொள்ளை போன வாழப்பாடி புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.
2 கோவில்களின் உண்டியலை உடைத்து திருட்டு
- புதுப்பாளையம் கோவில் உண்டியல், வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசப்பட்டு கிடந்தது.
- மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள், அந்த பகுதியில் உள்ள கோவில்களில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றது. இதனையடுத்து, வாழப்பாடி போலீசார், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கோவில் உண்டியல் திருட்டு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவில்களில், முகமூடி அணிந்த இருவர், பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆத்து மேடு பகுதியில் வீசப்பட்டு கிடந்த உண்டியல்.
சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவிலுக்குள் போகும் முகமூடி கொள்ளையர்.
புதுப்பாளையம் கோவில் உண்டியல், வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசப்பட்டு கிடந்தது. இதனால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், இரு கோவில்களையும் பார்வையிட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி உள்ள
முகமூடி அணிந்த கொள்ளையர்களின் காட்சிகளை வைத்தும், கைரேகை நிபு ணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அருகே 2 கோவில்களில் முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.