உள்ளூர் செய்திகள்

90 நாள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாள்

Published On 2023-02-12 13:04 IST   |   Update On 2023-02-12 13:04:00 IST
  • பயிற்சி வகுப்புகள் இந்த மாத பிற்பகுதியில் தொடங்கி மூன்று மாதம் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.3.2022 முதல் 14.6.2022 வரையிலான காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

இரண்டாவது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு ந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கப்பட வுள்ளது. அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி விண்ணப்பபடிவங்களை சம்மந்த ப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக்கடைகள் ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.மேலும், பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

எனவே, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50சதவிகிதத்திற்கு மேலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்.

இதனை விண்ணப்பிக்க தற்போது கால அவகாசமாக வரும் (பிப்ரவரி) 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News