உள்ளூர் செய்திகள்

கோவையில் ரூ.12 லட்சம் மோசடி

Published On 2023-06-06 09:22 GMT   |   Update On 2023-06-06 09:22 GMT
  • ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா மங்கலநிசாந்தா மற்றும் உறவினர்களுக்கு போலி விசாவை தந்துள்ளார்.
  • போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

இலங்கையை சேர்ந்த பிரேமரத்னா மகன் மங்கலநிசாந்தா (வயது 48). இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம், வடகோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (வயது34) என்பவரிடம், எனக்கும் உறவினர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டார். இதற்காக அவர் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

அப்போது விசா பெறுவதற்கு ரூ.11 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று ஜஷ்வா கூறினார். எனவே மங்கல நிசாந்தா மற்றும் உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்து 466 பணத்தை செலுத்தி உள்ளனர்.

அதன்பிறகு அவர்களுக்கு போலி விசா தரப்பட்டது. இந்த நிலையில் மங்கலநிசாந்தாவின் உறவினர் அந்த விசா மூலம் இலங்கை சென்றார். அப்போது கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மங்கலநிசாந்தா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News