செய்திகள்

வருமான வரி சோதனை நோக்கம் நிறைவேறி விட்டது- மு.க.ஸ்டாலின்

Published On 2018-07-21 06:54 GMT   |   Update On 2018-07-21 06:54 GMT
வருமான வரி சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
சென்னை:

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியுற்றது பற்றி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு, 15-வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி., இந்தித் திணிப்பு மற்றும் மதவாத அரசியல் ஆகியவற்றைத் தாண்டி மோடி அரசுக்கு அளிக்கப்படும் ஆதரவு என்பது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. இடையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வகையில் இருவருக்கும் இடையேயான ரகசிய உறவு நிரூபிக்கப்பட்டு உள்ளது.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கான நோக்கம் இதன் மூலம் நிறைவேறிவிட்டது.

அந்தச் சோதனையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கைமாறாக அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #ITRaid
Tags:    

Similar News