செய்திகள்

ஸ்ரீரங்கம் போனால் சிஎம் ஆகிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-06-27 11:06 IST   |   Update On 2018-06-27 11:06:00 IST
ஸ்ரீரங்கம் போனால் முதல்வர் ஆகிவிடலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். #StalinVisitSrirangam #MinisterJayakumar
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றது குறித்து கேட்டதற்கு அமைச்சர் கூறியதாவது:-



கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க.வின் கொள்கை என்ன என தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றிருந்த குமாரசாமி முதல்வர் ஆனதால், ஸ்டாலினும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். ஸ்ரீரங்கம் போனால் மட்டும் சிஎம் ஆக முடியாது. மக்கள் நினைத்தால்தான் சிஎம் ஆக முடியும்.

அரசியல் ரீதியாக எங்களது எதிரி தி.மு.க. தான். அந்த கட்சியுனுடன் எந்த கூட்டணியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #StalinVisitSrirangam #Jayakumar
Tags:    

Similar News