செய்திகள்
காவிரி பிரச்சனையில் அநீதி: மத்திய அரசு அலுவலகங்களை முடக்க வேண்டும்- வைகோ
காவிரி பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko #CauveryIssue
மயிலாடுதுறை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழகம் அழிவை நோக்கி செல்ல சமுக நீதியை குழி தோண்டி புதைக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழக மாணவ- மாணவிகளை வெளி மாநிலங்களில் நீட் தேர்வை எழுத அலைக்கழிப்பது. இவ்வாறான அநீதி எந்த காலத்திலும் நடைபெற்றதில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு வருகிற 14-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
சுப்ரீம் கோர்ட்டு அட்டார்னி ஜெனரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடுமா? என எழுப்பிய கேள்வி இதற்கு சான்று.
காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதை பயன்படுத்தி அப்பகுதி மக்களிடம் நிலங்களை குறைந்த விலையில் பெற்று ஷேல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயு போன்றவை எடுக்க தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் விட்டு லாப ஈட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
கர்நாடகாவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதை தடுக்கவோ, உடைக்கவோ முடியாது. அவ்வாறு கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது . காவிரி பிரச்சனையில் தமிழக மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வரவேற்கத்தக்கது. நம் உரிமையை ஒரு காலம் விட்டு தரக்கூடாது. மேலும் மக்களிடம் கொந்தளிப்பு வேண்டும். அது வன்முறையாக கூடாது. கிளர்ச்சிக்களமாக தமிழகம் மாறாதவரை காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காது.
எனவே ஒட்டுமொத்த தமிழர்கள் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்க வேண்டும். தமிழர்களை ஏளனமாக நினைத்த மத்திய அரசு தமிழர்களின் எழுச்சியை காணவேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko #CauveryIssue
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழகம் அழிவை நோக்கி செல்ல சமுக நீதியை குழி தோண்டி புதைக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழக மாணவ- மாணவிகளை வெளி மாநிலங்களில் நீட் தேர்வை எழுத அலைக்கழிப்பது. இவ்வாறான அநீதி எந்த காலத்திலும் நடைபெற்றதில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கு வருகிற 14-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.
சுப்ரீம் கோர்ட்டு அட்டார்னி ஜெனரல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடுமா? என எழுப்பிய கேள்வி இதற்கு சான்று.
காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதை பயன்படுத்தி அப்பகுதி மக்களிடம் நிலங்களை குறைந்த விலையில் பெற்று ஷேல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயு போன்றவை எடுக்க தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் விட்டு லாப ஈட்டும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.
கர்நாடகாவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறார்கள். இதை தடுக்கவோ, உடைக்கவோ முடியாது. அவ்வாறு கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது . காவிரி பிரச்சனையில் தமிழக மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி வரவேற்கத்தக்கது. நம் உரிமையை ஒரு காலம் விட்டு தரக்கூடாது. மேலும் மக்களிடம் கொந்தளிப்பு வேண்டும். அது வன்முறையாக கூடாது. கிளர்ச்சிக்களமாக தமிழகம் மாறாதவரை காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காது.
எனவே ஒட்டுமொத்த தமிழர்கள் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்க வேண்டும். தமிழர்களை ஏளனமாக நினைத்த மத்திய அரசு தமிழர்களின் எழுச்சியை காணவேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko #CauveryIssue