செய்திகள்
சசிகலாவுக்கு துணையாக தினகரனும் சிறைக்கு செல்வார்: எச்.ராஜா பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள தினகரனும் சிறைக்கு செல்வார் என்று எச். ராஜா கூறினார்.
புதுக்கோட்டை:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது :-
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி. தினகரனும் சிறைக்கு செல்வார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்த்தால் அத்திட்டம் செயல்படுத்தப்படாது. நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.