நவராத்திரி ஸ்பெஷல்
null

நவராத்திரியின் முதல் நாள் இன்று..! உச்சரிக்க வேண்டிய சிறப்பு மந்திரங்கள்

Published On 2025-09-22 06:30 IST   |   Update On 2025-09-22 14:19:00 IST
  • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
  • நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள்.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். இதில்,"சைலபுத்ரி" என்பது துர்க்கையின் முதல் வடிவம் ஆகும்.

நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்:

ஷைல் புத்ரி மந்திரம் என்பது துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல் புத்ரியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

சிறப்பு மந்திரங்கள்:

* ஓம் தேவி ஷைலபுத்ரியை நமஹ

விளக்கம்: தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

* வந்தே வாஞ்சிதலாபாய சந்திரார்த கிருதஷேக்ராம்। விருஷாரூடாம் ஷூலதாரிணீம் ஷைலபுத்ரீம் யஷஸ்விநீம்

விளக்கம்: என் ஆசைகளை நிறைவேற்றும், சந்திரனை கிரீடமாக அணிந்த, காளையின் மீது அமர்ந்திருக்கும், திரிசூலத்தை ஏந்திய, புகழ்மிக்க தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

இந்த மந்திரங்கள் நவராத்திரியின் முதல் நாளில் உச்சரிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களையும் ஆன்மீக பலத்தையும் பெற உதவுகிறது.

Tags:    

Similar News