லைஃப்ஸ்டைல்

பெண்களே பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

Published On 2018-06-09 02:33 GMT   |   Update On 2018-06-09 02:33 GMT
ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம். 
Tags:    

Similar News