பெண்கள் உலகம்

வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

Published On 2019-02-22 14:24 IST   |   Update On 2019-02-22 14:24:00 IST
இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை.
பொது இடத்தில் மலம் கழிக்காமல் கழிவறையைப் பயன்படுத்துவது அவசியம் என்பதைப் போலவே, கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதனை முறையாக சுத்தம் செய்வதும் அவசியம். இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை. அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார ஆர்வலர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை முன் வைக்கிறார்கள்.

வெஸ்டன் டாய்லெட்டைப் பயன்படுத்திய பிறகு, அதனை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு, சில நிமிட இடைவெளிகளில் டாய்லெட் சீட்டினை மூடி வைத்து அதன் பிறகு ஃப்ளஷ் செய்ய வேண்டும். தண்ணீரை ஃப்ளஷ் செய்யும்போதும் மூடிவைக்காவிட்டால், அதிலிருந்து வெளியேறும் கிருமிகளும், மலம் கலந்த அசுத்த நீரும் கழிவறையின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த நுண்கிருமிகள் கழிவறையிலுள்ள தரை விரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் அங்கு நாம் வைத்திருக்கக்கூடிய டூத் ப்ரஷ்கள், துண்டு போன்ற பிற பொருட்களின் மீதும் படிகிறது.

இப்படி அசுத்த நிலையில் உள்ள கழிவறையையும், அங்குள்ள மற்ற பொருட்களையும் பயன்படுத்திவிட்டு வெளியேறும்போது நமது கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் மூலமும் கழிவறையிலுள்ள கிருமிகள் ஒட்டிக் கொள்கிறது.

இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ள நபர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வெஸ்டன் டாய்லெட்டின் மீதுள்ள மூடியை சரியான முறையில் மூடி வைப்பதன் மூலமும், மூடிவைத்த பிறகு ஃப்ளஷ் செய்வதன் மூலமும் இதுபோன்ற கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
Tags:    

Similar News