உடற்பயிற்சி

யோகா செய்வதால் ஏற்படும் உங்களுக்கு தெரியாத நன்மைகள்!

Published On 2024-05-14 11:03 IST   |   Update On 2024-05-14 11:03:00 IST
  • யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
  • சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது.

யோகா செய்வது ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் தோரணையை மேம்படுத்துதல், அத்துடன் மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தருகிறது.

உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆகியவை உடற்தகுதியின் முக்கிய கூறுகளாகும். இதன் விளைவாக, யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

அந்த வகையில் உங்கள் காலை உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் ஏதாவது சாப்பிடுவது அவசியம். அதே சமயம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய, அந்த உணவானது இலகுவாகவும் அதிக கனமாகவும் இருக்கக்கூடாது. நாம் நம் நாளைத் தொடங்குவதற்கு முன், நம் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுக்க வேண்டும்.

உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய ஒரு பேரிச்சம் பழம் அல்லது பழங்கள் போதுமானதாக இருக்கும். மறுபுறம், உள்ளிருந்து நீங்கள் கட்டுப்படுத்தும் சுவாசத்தை சீர்குலைக்காமல் இருக்க, யோகாவை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது. யோகா செய்வதால் தன்னம்பிகை மற்றும் சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். மேலும் யோகா செய்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். யோகா செய்வதால் நியாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க முடியும். 

Tags:    

Similar News