பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது சரியானதா?
- தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம்.
- பெற்றோருக்கு சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.
டயப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை என்கிறார்கள் சிலர்... டயப்பர் அணிவிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர்... வாங்க பார்க்கலாம்...
பிறந்த குழந்தைகளுக்கு சரியான அளவுள்ள மற்றும் தரமான டயப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவையாக இருக்கின்றன.
மேலும் ஈரத்தால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைக்கு ஒருமுறை டயப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை.
பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.
தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயப்பர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின்போதும் மற்றும் தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.