குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கும் குறட்டை வருவது ஏன்?

Published On 2023-01-27 05:03 GMT   |   Update On 2023-01-27 05:03 GMT
  • ஒருவரது குறட்டை சத்தம் யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும்.
  • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ஒருவரது குறட்டை சத்தம் அந்த அறையில்- சில சமயங்களில் அந்த வீட்டில், யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.

உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குறட்டை ஏற்படலாம். அதுவே குழந்தைகளுக்கு என்றால் டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதால் உள்நாக்கு நீண்டு, காற்று செல்லும் வழியை தடுத்தாலும் குறட்டை ஏற்படலாம்.

பொதுவாகவே குறட்டை விடுபவர்களுக்கு தூக்கக்குறைவு ஏற்பட்டு, அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News