லைஃப்ஸ்டைல்
எந்த வயது குழந்தைக்கு, எத்தகைய புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்...?

எந்த வயது குழந்தைக்கு, எத்தகைய புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்...?

Published On 2021-11-26 08:25 GMT   |   Update On 2021-11-26 08:25 GMT
நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
உலகறிந்த மந்திரவாதி சிறுவனான, ஹாரி பாட்டரின் வாழ்க்கையை சொல்லும் ‘ஹாரி பாட்டர்’ வரிசை புத்தகங்கள் ஏழு பாகங்களாக கிடைக்கின்றன.

ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.

‘பேமஸ் பைவ் மற்றும் சீக்ரெட் செவன் வரிசைப் புத்தகங்கள்’, துப்பறியும் கதைகளை கொண்டவை. ‘ஹாரிபிள் ஹிஸ்டரி’, வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை.

கிட்டத்தட்ட, ‘காமிக்ஸ்’ மாதிரி தான் இருக்கும். அதனால் புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே...

நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.

நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

வயதுக்கு ஏற்ப குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...

* மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு...

படங்கள் அதிகம் உள்ள, எழுத்துக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை, குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். பெற்றோர், அவர்களுக்கு படித்துக்காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்ல வைக்கலாம். படங்களை சுட்டிக்காட்டி, ‘இது என்ன?’ என்று கேட்கலாம். ‘இதே போல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக்காட்டு பார்க்கலாம்..’ என்று புதிர் போடலாம்.

* ஏழு வயது முதல் பத்து வயதுள்ள குழந்தைகளுக்கு...

இந்த வயது குழந்தைகளும் படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.

இவர்களுக்கு பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.

ஆங்கில வரிசையில், ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’, ‘ஆலிஸ் இன் ஒன்டர்லாண்ட்’ போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். ‘தி விசார்ட் ஆப் ஊஸ்’ இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். ஆலிசின் அற்புத உலகம், இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.

* பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு...

தானாகவே தேடித்தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் சாகச கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.
Tags:    

Similar News