வழிபாடு

சிங்கரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

Published On 2024-05-22 05:30 GMT   |   Update On 2024-05-22 05:30 GMT
  • பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கில் சாமி, மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று (22-ந் தேதி) நடை பெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளி னார். பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளை (23-ந் தேதி) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News