வழிபாடு

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி தேரோட்ட திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2023-03-23 07:49 GMT   |   Update On 2023-03-23 07:49 GMT
  • இந்த திருவிழா ஏப்ரல் 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
  • 31-ந்தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரிஅருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதே போல இந்தஆண்டுக்கான பங்குனி தேரோட்ட திருவிழா வருகிற 24-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

இந்ததிருவிழாஅடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 1-ம் திருவிழாவான நாளை (24-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு முட்டப்பதி திருபாற் கடலில்அய்யாவழிபக்தர் கள்தீர்த்த மாடி பதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கி றது. இரவு 7.30 மணி க்குஅய்யா கருட வாகனத் தில்எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதா ளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

2-ம் திருவிழாவான 25-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 30-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு7-30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் 4 மற்றும்5-ம்திருவிழா அன்று இரவு 7-30மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 6-ம் திருவிழா அன்று இரவு 7-30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 7-ம் திருவிழாஅன்றுஇரவு7-30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

8-ம் திருவிழா வான 31-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலை 4 மணி க்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்ப டிப்பும் நடக்கிறது. பகல் 12மணிக்குஉச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 11 மணிக்குஅன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

9 மற்றும் 10-ம் திருவிழா வான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் இரவு7-30மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தாஆர்.பாலசுந்தர ம், தர்மகர்த்தா ஆர்.செல்வராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News