- ‘கோவிந்தா..’ கோஷம் திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது.
- வேங்கடேச ஸ்தோத்தித்தை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி.
திருப்பதிக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் காதுகளிலும் வேங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் கேட்பதை தவிர்க்க இயலாது. பிரசித்தி பெற்ற இதனை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார்.
இந்த ஸ்தோத்திரத்தில் 'விநா வேங்கடேஸம் ந நாதோ ந நாத' என்ற வரி வரும். 'உன்னைத் தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடைகிறேன்' என்பது இதன் பொருள் ஆகும்.
அப்படி ஸ்துதி செய்த மார்க்கண்டேய மகரிஷிக்கு திருப்பதி சீனிவாசப் பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்தார். நாமும் அந்த ஸ்தோத்திரத்தை சொல்லி வணங்கினால், திருப்பதி ஏழுமலையான் அருள் நமக்கும் கிடைக்கும்.
இதனை திருமலைவாசனே வேறு விதமாக சொல்லியிருக்கிறார். அதாவது "என்னை 'கோவிந்தா..' என்று ஒரு முறை அழைத்தால், உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை 'கோவிந்தா..' என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன்.
மூன்றாவதாக 'கோவிந்தா..' என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்" என்று சொல்லியிருப்பதாக திருப்பதி தல புராணம் தெரிவிக்கிறது. அதனால்தான் 'கோவிந்தா..' என்ற கோஷம், திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது.
குபேரனுக்கு மட்டும் கடன்பட்டவராக இல்லாமல், தனது நாமத்தை உச்சரிப்பவர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கடன்பட்டவனாக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.