கிரிக்கெட்

ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன்- யுவராஜ் சிங்

Published On 2024-05-07 11:56 GMT   |   Update On 2024-05-07 11:56 GMT
  • ரோகித் எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார்.
  • கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வருகிற 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ரோகிசர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது தெளிவான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் ரோகித் சர்மா.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை ரோகித் சர்மா அழைத்து சென்றார். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை.

ரோகித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.

ரோகித் சர்மா வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் மாறவில்லை. அதுதான் ரோகித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்.

இவ்வாறு யுவராஜ் கூறினார்.

இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர் யுவராஜ் சிங். 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் போன்ற காரணங்களால் யுவராஜ் சிங்கிற்கு இந்த மரியாதைக்குரிய பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறி இருந்தது.

Tags:    

Similar News