கிரிக்கெட்

ஜெய்ப்பூர் மைதானத்தில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி

Published On 2024-04-06 15:08 GMT   |   Update On 2024-04-06 15:08 GMT
  • ஜெய்ப்பூர் மைதானத்தில் 9-வது இன்னிங்சில் அரைசதம் அடித்துள்ளார்.
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் இந்த போட்டிக்கு முன் 8 முறை விளையாடியுள்ளார்.

ஆனால் இந்த 8 இன்னிங்சிலும் அவரை அரைசதம் அடித்ததில்லை. இந்த நிலையில் இன்று 39 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் முதன்முறையாக தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

மேலும், இன்றைய ஆட்டத்தில் 34 ரன்னை தொட்டபோது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்துள்ளார்.

Tags:    

Similar News