கிரிக்கெட்

அம்பத்தி ராயுடு வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து

Published On 2024-04-04 10:21 GMT   |   Update On 2024-04-04 10:21 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.
  • அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

திருப்பதி:

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தற்போது ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

ரவீந்திர ஜடேஜா, தீபக்சாகர், சிவம் துபே, மற்றும் முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அழைப்பினை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அம்பத்தி ராயுடு வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அம்பத்தி ராயுடுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை அணிந்திருந்தார்.

அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். வீரர்கள் பாரம்பரிய ஐதராபாத் பிரியாணியை ருசித்து சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அம்பத்தி ராயுடு ஓய்வில் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

அவர் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து வருகிறார். வீரர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அம்பத்தி ராயுடு வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த காட்சி.

Tags:    

Similar News