கிரிக்கெட்
null

எங்களது வெற்றியை நாங்களே தாரை வார்த்து விட்டோம்- தோல்வி குறித்து கோலி கருத்து

Published On 2023-04-27 08:13 GMT   |   Update On 2023-04-27 08:35 GMT
  • கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எங்களது வெற்றியை நாங்களே தாரைவார்த்து விட்டோம் என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எங்களது வெற்றியை நாங்களே தாரை வார்த்து விட்டோம். கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். இந்த போட்டியில் நாங்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பதே உண்மை.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

Tags:    

Similar News