கிரிக்கெட்

இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று டோனிக்கு பரிசளிப்போம்- ஜடேஜா நம்பிக்கை

Published On 2023-04-12 07:10 GMT   |   Update On 2023-04-12 07:10 GMT
  • சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
  • ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை.

இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று டோனிக்கு பரிசளிப்போம் என்று சி.எஸ்.கே. அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போல ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெறும் பட்சத்தில் அது டோனிக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளனர். இதனால் ஆட்டம இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மோதலாக இருக்கும்.

இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

Tags:    

Similar News