கிரிக்கெட்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை- குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்

Published On 2023-05-30 10:36 GMT   |   Update On 2023-05-30 10:36 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
  • வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பரபரப்பான ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. 

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்றதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் அவர்களது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






 



Tags:    

Similar News