கிரிக்கெட் (Cricket)
null

ஐசிசி உலகக் கோப்பை கனவு அணியில் 6 இந்தியர்கள்: கேப்டன் யார் தெரியுமா?

Published On 2023-11-20 14:30 IST   |   Update On 2023-11-20 15:11:00 IST
  • ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்தனர்.
  • ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பா மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பை 2023-க்கான கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகியோர் ஐசிசி கனவு அணியின் இடம் பிடித்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பாவும் தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், நியூசிலாந்து அணியில் டெய்ரி மிட்செல், இலங்கை அணியில் மதுஷன்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 12-வது வீரராக தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி இடம் பிடித்துள்ளார்.

Tags:    

Similar News