சினிமா

விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் - இயக்குநர் அமீர் பேட்டி

Published On 2018-06-06 11:49 GMT   |   Update On 2018-06-06 11:49 GMT
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.



விஜய்யின் தூத்துக்குடி சந்திப்புக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த அமீர் கூறும்போது, 

காலா படத்தின் புரமோஷனுக்காக தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார் என்றும், நடிகர் விஜய்யும், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay 

Tags:    

Similar News