சினிமா செய்திகள்

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ராஷ்மிகா

Published On 2025-12-30 07:45 IST   |   Update On 2025-12-30 07:45:00 IST
  • அவரது நடிப்பில் ‘காக்டெயில்', ‘மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
  • பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

'புஷ்பா' படத்தில் நடித்து பான் இந்திய நடிகையாக பிரபலமான ராஷ்மிகாவுக்கு அதன்பிறகு அடித்தது அனைத்துமே 'ஜாக்பாட்' தான்.

தமிழில் விஜய் ஜோடியாக நடித்த 'வாரிசு' ரூ.300 கோடியும், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்த 'அனிமல்' படம் ரூ.1,000 கோடியும், அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த 'புஷ்பா-2' ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

அவரது நடிப்பில் 'காக்டெயில்', 'மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

இது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ள ராஷ்மிகா, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்.

Tags:    

Similar News