சினிமா செய்திகள்

நான் அரசியல் இயக்கம் தொடங்கினால்... இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி

Published On 2025-12-29 09:08 IST   |   Update On 2025-12-29 09:08:00 IST
  • அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன்.
  • உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது.

விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு சிவகாசியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் மாவட்ட மாரி செல்வராஜ் நற்பணி இயக்கம் மாவட்ட தலைவர் மான்ராஜன் வரவேற்றார். விழாவில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை இயக்குனர் மாரி செல்வராஜ் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

அடுத்த படத்திற்கான கதைகளை தீவிரமாக எழுதி வருகிறேன். ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

உங்கள் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேனா என்று எனக்கு தெரியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியுமா என்ற தயக்கம் என்னிடம் இருக்கிறது. நான் அரசியலில் இல்லை. எதற்காகவும் சமரசம் ஆக மாட்டேன். நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்று கூறிவிட்டு தான் எனது முதல் படத்தை எடுக்க தொடங்கினேன். வரும் காலங்களில் நான் அரசியல் இயக்கம் தொடங்கினால் அந்த இயக்கம் சாதிக்கு எதிராகத்தான் இருக்கும் என்றார்.

Tags:    

Similar News