- ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.
- ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது.
ஐஷ்வர்யா அர்ஜுன் அம்மாவை சிறு வயதிலேயே இழந்து தன் அப்பா சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக வளர்ந்து பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் ஒருநாள் சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு செல்கிறார்.
அப்படி செல்லும் வகையில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார். அவர் தன் ஊருக்கு போக லிப்ட் கேட்க, சீதாவும் லிப்ட் கொடுத்து அவருடன் பயணிக்கிறார். அப்படி செல்லும் வகையில் டீக்கடை, ஸ்கூல் குழந்தைகள், ரோட்டில் பழம் விற்பவர் என அனைவரையும் சந்தித்து நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.
அப்படி அவர் ஒர்க் ஷாப் பில்டிங்கில் அருகில் வரும் போது கேஸ் லீக்கெஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, ஐஸ்வர்யா அர்ஜுன் நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.
20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என சீதா பயணத்தை தொடங்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். நடனமெல்லாம் சூப்பர். நிரஞ்சன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சுமித்ரா, கோவை சரளா, சரண் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
வித்தியாசமான கதையை, பல படங்களில் பார்த்த காட்சிகளின் மூலம் எழுதி இயக்கி நடித்துள்ளார் அர்ஜூன். அடிதடியை குறைத்து, குடும்ப உறவுகள் மற்றும் காதலர்களின் அன்பை பதிவு செய்த இயக்குனர் அர்ஜூன், பல காட்சிகள் இது டப்பிங் படம் என்று சொல்வதை தவிர்க்க முயற்சித்து இருக்கவேண்டும்.
ஒளிப்பதிவு
ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்களில் தெலுங்கு வாடை. பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.