சினிமா

கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்

Published On 2018-10-12 13:20 GMT   |   Update On 2018-10-12 13:20 GMT
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான மடோனா செபஸ்டியன் அடுத்ததாக, கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் என்று கூறியிருக்கிறார். #MadonnaSebastian
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.

தற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



மடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News