திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி
- இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
- முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.
திருவொற்றியூரில் பட்டினத்தார் முக்தி
"பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
அத்தகைய பட்டினத்தார் முக்திபெற்ற இடம் திருவொற்றியூர்.
இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார்.
பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.
திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.
பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார்.
மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார்.
வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.
இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை.
தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார்.
திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.
முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார்.
இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது.