ஆன்மிக களஞ்சியம்

மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

Published On 2023-09-02 13:08 GMT   |   Update On 2023-09-02 13:08 GMT
  • மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
  • தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.

தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.

தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.

Tags:    

Similar News