search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார்.
    • 'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    சென்னை புரசைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆப் பரோடா ஓ.பி.சி. தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-வது 'ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம்' நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    கருத்தரங்கிற்கு பிறகு அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

    குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் தாலியை பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள் என்றும், அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வருவது அவர்களின் பதற்றத்தைக் காட்டுகிறது.

    'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவ்வாறு இருப்பதில் என்ன தவறு?

    'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவும் ஒரு ஜனநாயக முறையிலான முன்னெடுப்புதான். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
    • கொல்கத்தாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், இன்று இரவு மேற்கு வங்காளம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • நேற்று நள்ளிரவில் மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

    நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    தீ விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல் மந்திரி கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லி குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.
    • இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் என்றார் கார்கே.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மோடி அரசு பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது.

    நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.

    இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல். ராகுலுக்கும், மோடிக்குமான தேர்தல் அல்ல.

    பிரதமர் மோடி முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகாரை அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் பீகாரில் ஆடப்படுகிறது. இதனால் அவர் பீகாரையும், அதன் வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
    • ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர். நல்ல நோக்கங்கள், கொள்கைகள் காரணமாக 3-வது முறையாக பா.ஜ.க-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது. அத்தகைய பிரதமர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? தனது பதவியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கும் ஒரு பிரதமரால் நாட்டை நடத்த முடியுமா?

    எனவே வலிமையான நாட்டை உருவாக்க வலிமையான பிரதமரை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வகுப்புவாத குணம் கொண்டவர்கள். மிகவும் சாதிவெறி உள்ளவர்கள் என்பதை அறிவார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். எந்த அறிவாளியும் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் கட்சியில் முதலீடு செய்யமாட்டார்.

    சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசு வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக மாபியாக்களை எதிர்நோக்கியிருந்தது.

    ஆனால் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்காக தங்கள் வாக்குகளை யாரும் வீணாக்க விரும்பவில்லை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அர்ப்பணித்துள்ளன. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து உழைக்கிறேன் என தெரிவித்தார்.

    • குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
    • உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    டெல்லி கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை உள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனை 3 மாடிகளை கொண்டதாகும்.

    கடந்த 2 நாட்களில் அந்த மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பிறந்தன. மருத்துவமனையின் 2-வது மற்றும் 3-வது மாடிகளில் அந்த குழந்தை கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். 3 குழந்தைகளை நேற்று மாலை அவர்களது பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் 12 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் இருந்தனர்.

    நேற்று இரவு 11.20 மணிக்கு இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் திடீரென தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் 11.40 மணிக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் விவேக் விகார் பகுதிக்கு விரைந்து வந்தன.

    அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. தீயணைப்பு படை வீரர்கள் 2 கட்டிடங்களிலும் பரவிய தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். இதற்கிடையே குழந்தைகள் நல மருத்துவ மையத்தில் இருந்த 12 குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

    12 குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் கிழக்கு டெல்லியில் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் கருகியதால் சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    மற்ற 5 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினாலும் அவர்களது நிலையும் மோசமாக இருந்தது. அதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவமனை கட்டிடம் முழுமையாக எரிந்து போனது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகள் மருத்துவமனையின் கீழ்தளத்தில் ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின. அங்கிருந்துதான் தீ விபத்து ஏற்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    இந்த தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில், "டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உருக்குகிறது. இந்த நம்பமுடியாத இக்கட்டான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே போல் இந்த தீ விபத்து தொடர்பாக டெல்லி முதலவர் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு நாங்கள் அனைவரும் துணை நிற்கிறோம். சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கான காரணங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

    தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

    மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த நிகழ்வில் அலட்சியம் காட்டப்படாது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும்.
    • இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார்.

    எம்.பி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    விருது விழாவில் பேசிய அவர், "உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.

    கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார். இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.

    மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தது.

    மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி.

    அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறான் அல்லவா. நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார்.. அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும் போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா.

    இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர் தான் இவரும். ஆனால் இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் போகும் போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா. அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.

    • ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடினர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

    தீ விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி பூபேந்திர படேல், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவர்களிடம் பேசினேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    அதே போல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவி செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கெள்கிறேன். மேலும், குஜராத் அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் விரைவான நீதியை வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
    • வாக்குப்பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    டெல்லி, அரியானா உள்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப் பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால் அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.
    • உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை என்றார் கார்கே.

    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கல்புர்கியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மா கங்கா என அழைக்கப்படும் 2047-ம் ஆண்டுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தயாரித்துள்ளார். 2047 வரை அவர் இருப்பாரா?

    அவர் சில சமயங்களில் கடலுக்குள் செல்வார். சில சமயம் கங்கையின் உள்ளே செல்கிறார். சில சமயம் குகைகளுக்குச் செல்கிறார். சில சமயம் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். அவரது தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.

    உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை. நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட காரியங்களைச் செய்தால் கெட்ட பலன்தான் கிடைக்கும்.

    விஷத்தைக் கண்டு அதிலிருந்து விலகி இருக்கச் சொன்னாலும் அதை நக்க பிடிவாதம் பிடித்தால் என்ன பலன்? மோடியும் அப்படித்தான் என தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன.

    பாட்னா:

    பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் மோடி, மறுபுறம் உங்களிடம் பொய் சொல்லும் இந்தியா கூட்டணி இருக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த பாரத் ஆக்குவதில் நான் 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தேர்தல் இந்தியாவை வலிமையாக்க 24 மணி நேரமும் உழைக்கும் மோடிக்கும், வேலை இல்லாத இந்தியக் கூட்டணிக்கும் இடையே நடப்பதாகும்.

    இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர். அதனால்தான் இந்த இந்தியா கூட்டணி என்னை தவறாக பேசுவதில் மும்முரமாக உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன. அவர்கள் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர்.

    இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. இதை டாக்டர் அம்பேத்கரும் கூறியுள்ளார். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகின்றன.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் வகுப்புவாதிகளாக இருக்கிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்க இந்தியா கூட்டணியை அனுமதிக்க மாட்டேன்.

    தங்கள் வாக்கு வங்கியை சந்தோஷப்படுத்த, காங்கிரஸ் சிறுபான்மை நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை ஒரே இரவில் மாற்றியது. இதற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு இந்த நிறுவனங்களில் சேர்க்கையின்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி முழு இட ஒதுக்கீட்டைப் பெற்றனர்.

    இது எல்.இ.டி பல்புகளின் காலம். ஆனால் பீகாரில் சிலர் லாந்தருடன் அலைகிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 'லாந்தர்' ஒரு வீட்டிற்கு மட்டுமே வெளிச்சம் தருகிறது. அதே நேரத்தில் பீகார் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×