என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"
- பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
- கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் புகார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ஆளும் கட்சி மீது புகார் கூறி வருகின்றனர். மேலும் இதற்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு பேரணி யாக சென்ற இளைஞர் காங்கிரசார், அங்கு அவரது உருவப்பொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ள நிலையில், முதல்-மந்திரி பினராயி விஜயன் குடும்பத்தினருடன் விடுமுறையில் வெளிநாடு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களும் எழுப்பப் பட்டன.
- குடும்பத்தினருடன் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
- பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் கடந்த 6-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கம்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
பினராயி விஜயனுடன் அவரது மனைவி கமலா, பேரன், மகள் வீணா விஜயன், அவரது கணவரும் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான முகமது ரியாஸ் உள்ளிடடோரும் சென்றனர்.
மக்களவை தேர்தலுக்கு மத்தியில் பினராயி விஜயனின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்து காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு ஸ்பான்சர் செய்தது யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் பினராயி விஜயனின் வெளிநாட்டு பயணம் விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தபடி இல்லாமல், 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கேரளா திரும்பினார். பயண நாட்களை குறைத்துக்கொண்டு திரும்பியது குறித்து கேட்டதற்கு பினராயி விஜயன் பதிலளிக்கவில்லை.
- வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
கேரளா:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
* கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
* பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.
* காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
* திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.
* கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.
* பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.
#LokSabhaElections2024 | Kerala CM Pinarayi Vijayan casts his vote at polling station number 161 in Kannur pic.twitter.com/XdQLAdzLCt
— ANI (@ANI) April 26, 2024
#WATCH | Karnataka: Finance Minister Nirmala Sitharaman casts her vote at BES polling booth in Bengaluru.
— ANI (@ANI) April 26, 2024
Karnataka is voting on 14 seats today in the second phase of Lok Sabha elections.#LokSabhaElections2024 pic.twitter.com/70BZFe9x6s
#WATCH | Kerala: BJP candidate from Pathanamthitta, Anil Antony shows his inked finger after casting his vote at a polling booth in Thiruvananthapuram.
— ANI (@ANI) April 26, 2024
CPI-M has fielded Thomas Isaac from here. Congress has its sitting MP Anto Antony as its candidate in the constituency.… pic.twitter.com/GI2OZCAy41
- கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
- இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
திருவனந்தபுரம்:
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.
ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.
- 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
- தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (paid news) போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF), காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF), பா.ஜனதா ஆகியவை போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பல மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்புகளை அம்மாநில முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "நம்பகத்தன்மையின்மை அல்லது ஒருதலை பட்சம் ஆகியவற்றின் காரணமாக சில குறிப்பிட்ட செய்திகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (Paid News) என முத்திரை குத்தப்படுகின்றன. அதே அடிப்படையில் சில கணிப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.
2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கணக்கெடுப்பு நடத்தும் முறை, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, முடிவு எப்படி கணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரியாது. சில ஏஜென்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.
கேரள மக்கள் தங்கள் அரசியல் கருத்துகளை உருவாக்க போலியான செய்திகளையோ அல்லது போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளையோ நம்பியிருக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது.
- மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பாலக்காடு:
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பட்டம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பாஜக மற்றும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். இதை யாராவது நம்புவார்களா? வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். "மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது". மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பாஜக தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மௌனம் காத்து வருகிறது என்றார்.
பினராயி விஜயனின் கட்சியான கம்யூனிஸ்டும் மற்றும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிரே களம் காண்கின்றன.
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
- கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
- 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது.
- 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருவனந்தபுரம்:
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் இன்று (5-ந்தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்தன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
- பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது.
- காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த இரு கட்சிகளும் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுகிறது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அதே வேளையில் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடுவதால், ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனையும் மீறி ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.
இது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தை, தான் முன்னெடுப்பதாக கூறும் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏன் போட்டியிடுகிறார்? என்று டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தபடி உள்ளனர். மேலும் தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் ஒரே தொகுதியில் தனித்தனியாக மல்லுக்கட்டுவது மற்ற கட்சிகளின் மத்தியிலும் பேசும் பொருளாக உருவெடுத்து இருக்கிறது.
இந்நிலையில் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பொருத்தமற்றது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் ஆனி ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியின் குறிக்கோளை தோற்கடித்து ராகுல்காந்தியை வயநாட்டில் நிறுத்துவது பொருத்தமற்றது. அவர் கேரளாவில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போராடுவதற்காக வந்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராகவும் ராகுல்காந்தி போட்டியிடுவது என்ன நியாயம்? அவர் வயநாட்டில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் எங்களுக்கு எதிராகவே போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு வேட்டையாடி வருகிறது. கலால் கொள்கை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்த நடவடிக்கை இறுதியில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையில் முடிந்தது.
குடியுரிமை திருத்த சட்டம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் மதச்சார்பின்மையை பாரதிய ஜனதா அரசு அழித்து வருகிறது. ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஆனால் அவர் சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
- இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
- ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
- நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.
இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.
முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
- தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
- நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது
தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்