என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
போரினால் பெரும் சேதம்: உக்ரைனில் இணைய சேவை வழங்க எலான் மஸ்க் செய்த அதிரடி செயல்..
Byமாலை மலர்2 March 2022 8:38 AM GMT (Updated: 2 March 2022 8:38 AM GMT)
உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷியா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷியா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அந்நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்ய முன் வந்தார். இதன்படி தங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் ’ஸ்டார் லிங்க்’ இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார்.
ரஷிய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, அவற்றை உக்ரைனுக்கு வழங்குவதே தனது திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷிய படைகள் மேலும் தாக்குதலால் நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவையை நிறுத்த முடியாது என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டு இந்த இணைய சேவை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X