என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
ஒரே மாதத்தில் 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ
Byமாலை மலர்17 Feb 2022 8:21 AM GMT (Updated: 17 Feb 2022 8:21 AM GMT)
டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.
அதே மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியதே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறைந்த ஊதியம் வாங்கும் வாடிக்கையாளர்களே பி.எஸ்.என்.எல் நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
சந்தை பங்குகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ 36 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஏர்டெல் 30.81 சதவீத பங்குகளையும், வோடபோன் 23 சதவீத பங்குகளையும், பி.எஸ்.என்.எல் 9.90 சதவீத பங்குகளையும், எம்.டி.என்.எல் 0.28 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் 36.4 கோடி ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் தான் உள்ளது. ஏர்டெல் 34.8 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X