search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் 11 ப்ரோ
    X
    ஐபோன் 11 ப்ரோ

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு?

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்தியாவில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஐபோன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஐபோன் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் என இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்க வகையில் மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தும் விதமாக இரு நிறுவனங்களும் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக கூறப்படுகிறது.

    ஐபோன் XR

    இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி பணிகளை விஸ்ட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்ட்ரன் நிறுவன பணிகள் எதுவரை நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் XR மற்றும் ஐபோன் SE மாடல்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகின்றன.
    Next Story
    ×