search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "​ காங்கிரஸ்"

    • காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
    • முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள தி.மு.க. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறது.

    எனவே அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளின் பலத்தை எடை போட்டு ஒவ்வொரு தொகுதியையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பூத் கமிட்டிகள்தான். எனவே கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டிகளின் பலத்தையும் எடை போடுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த சோனியா, பிரியங்காவிடமும் கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனியா கட்சியை வலுப்படுத்தும் படி கூறினார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் இடங்களில் பலப்படுத்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார். இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

    தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக பூத் கமிட்டிகள் நிலவரம் பற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் முக்கியமாக இதைப்பற்றி தான் ஆலோசிக்கிறோம். எங்கள் கையை நாங்கள் பலப்படுத்துகிறோம். பூத் கமிட்டிகளை பொறுத்த வரை குறைந்தபட்சம் ஒரு தலைவர் அவரின் கீழ் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏற்கனவே 60 சதவீதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றும் பலர் ஒப்படைப்பார்கள்.

    எனவே 85 சதவீதம் வரை நிறைவடையும் என்று கருதுகிறோம். 100 சதவீத பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த இலக்கை நோக்கி பணியை தீவிரப்படுத்து வோம்.

    முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு, சிவராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன்குமார், அடையாறு துரை, ஊட்டி கணேஷ், கே..டி.உதயம் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள் கோபண்ணா, உ.பலராமன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×