search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிலாரி கிளிண்டன்"

    அமெரிக்க அதிபர் பதவிக்கு 2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார். #TulsiGabbard #2020presidentialrun
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒருசதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர்.

    இவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து நான்காவது முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (செனட்) உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துல்சி கபார்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற சிறப்பிடத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், அதிபர் பதவிக்கான வேட்பாளராக அவரை முன்னிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஜனநாயக கட்சி பொறுப்பாளர்களின் ஆதரவை அவர் முன்னதாக பெற வேண்டியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் தெரிவித்திருந்தார்.


    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக களமிறங்கிய பெர்னி சான்டர்ஸ்-ஐ துல்சி கபார்ட் ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டும் இயக்கத்தை தொடங்கிய துல்சி கபார்ட், ‘நமது நாட்டுக்காகவும் நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாத சவால் என்று ஏதுமில்லை. நீங்கள் என்னோடு இணைவீர்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார். #TulsiGabbard #2020presidentialrun 
    அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை பாலிவுட் நடிகை வித்யா பாலன் சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். #VidyaBalan #HillaryClinton
    முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. அம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

    அதனுடன், ‘விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

    சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு கண்ணாடி மேற்கூரையை உடைத்தால் மட்டுமே வானத்தை அடைய முடியும் என்று. அவர் நமக்காக உடைத்துள்ளார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் நிச்சயம் வானத்தை அடைவார். 

    உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் அவரைக் கணித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு ஹீரோவாக இருப்பதற்கு நன்றி ஹிலாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.
     
    ஒபாமா, ஹிலாரிக்கு வெடிபொருள் பார்சல் அனுப்பப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக, டிரம்ப் கூறுகையில், இது அருவருக்கத்தக்க செயல். அமெரிக்காவில் எந்த வகையிலும் பயங்கரவாதம் நுழைவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோள் என்றார்.

    இதுகுறித்து மெலானியா டிரம்ப் கூறுகையில், இது கோழைத்தனமான செயல் என தெரிவித்தார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். CNNbureauinNY #NYCNNbureauevacuated #CNNsuspiciouspackage
    நியூயார்க்:

    அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் அந்நாட்டின் மிகப்பிரபலமான ‘சி.என்.என்.’ செய்தி தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ளது.

    டைம் வார்னர் சென்டர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்துக்கு இன்று சந்தேகத்துக்குரிய மர்ம பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தங்களது செய்தி ஒளிபரப்பின்போது ஒரு அறிவிப்பை ‘சி.என்.என்.’ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவரசமாக வெளியேறினர். 

    இதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் வெடிப்பொருள் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி நிலையத்துக்கு உளவுத்துறை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர். #CNNbureauinNY  #NYCNNbureauevacuated  #CNNsuspiciouspackage
    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    நியூயார்க்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அவ்வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை இடைமறித்து, கைப்பற்றியதாக அமெரிக்க உளவுப்படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

    அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் கொடையாளருமான ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary
    ×