search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்மன்பிரீத்"

    • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம்.
    • இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், '2023-24-ம் ஆண்டு சீசனில் நாங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளோம். இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

    எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரு வீராங்கனையாக நானும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.

    • 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    • நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    மிர்புரி:

    இந்தியா-வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

    பரபரப்பான இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியன்றி 'டை'யில் முடிவடைந் தது. முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது.

    இந்தப் போட்டி'டை'யில் முடிந்ததில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. இதனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதல் ஆட்டத்தில் வங்காள தேசமும் (40 ரன்), 2-வது போட்டியில் இந்தியாவும் (108 ரன்) வெற்றி பெற்று இருந்தன.

    3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் நடுவர்களின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இரு அணிகளுமே மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். வங்காள அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடினார்கள். இடையில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கொடுத்து விட்டோம்.

    நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பரிசளிப்பு விழாவின்போது வங்காளதேச கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்தனர்.

    இவ்வாறு ஹர்மன் பிரீத் கவூர் கூறியுள்ளார்.

    ×