search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில்"

    • வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன வீதிஉலாவில் கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வருகின்றனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனை.
    • சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கியது.

    சாஸ்திரப்படி 100 ருத்விக்குகளுடன் அர்ச்சனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரிசுவாமி கூறியதாவது:-

    உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி வில்வார்ச்சனையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்பட்டது. தெலுங்கு கார்த்திகை மாதத்தில் வில்வ இலையை சமர்ப்பித்து பரமேஸ்வரரை வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன் அடைந்து, முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரருக்கு கோடி வில்வ இலைகளால் அர்ச்சனை மற்றும் பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் முக்கிய அர்ச்சகர்கள், வேதபண்டிதர்களான அர்த்தகிரி, மாருதிசர்மா, ருத்விக்குகள் அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர்.முதலில் கலச ஸ்தாபன பூஜை செய்து, அதன் பிறகு வேத பண்டிதர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்பாளுக்கு கோடி குங்குமார்ச்சனையும் நடத்தினர்.

    கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தினமும் 2 காலங்களில் நடத்தப்படுகிறது. கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×