search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekantha Seva"

    • வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று முன்தினம் காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் கோவிலில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரே கொடிமரத்தில் கொடியிறக்கம், இரவு சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    13-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே உள்ள பள்ளியறையில் சாமி-அம்பாளுக்கு ஏகாந்த சேவை நடத்தப்படுகிறது.

    ×