search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளத்தால்"

    • மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    மேட்டூரில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, பசுவேஸ்வரர் வீதி, கந்தன் பட்டறை,| குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி அரிசி, பெட்ஷீட், வேஷ்டி, சர்ட், சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராசன்,ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், பவானி நகரமன்றத் நலைவர் சிந்தூரி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ×