search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரட்டானேஸ்வரர் கோவில்"

    • வீரட்டானேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழ் மாத முதல் சோமவார தினத்தன்று அறுபத்தி மூவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பால், தயிர்,சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு மூலிகை திரவிய ங்களால்சிறப்பு அபிஷேகம்,ஆராத னை விசேஷ பூஜை சிறப்பு மலர் அலங்காரம், ஆகியவை நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு சமயக்குரவ ர்களான அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோர் ஸ்தல நாயகர் திரிபுர சம்காரமூர்த்தி யை வணங்கிய நிலையில் எழுந்தருளி சேவை சாதிக்கி ன்றனர் என்பது மிகவும் சிறப்பாகும்.

    • திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
    • சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவ–ர்சாமி, அம்பாள், உறசவர் பெரியநாயகி அம்பாள்ஆகியோருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சா மிர்தம் மற்றும் மூலிகை திரவியங்கள், மூலிகை பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும், நேர்த்திகடனுக்காகவும் கிரிவலம் வந்து சாமி தரி சனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை–பெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் பெரிய நாயகி ஊஞ்சலில் எழுந்த ருளி சேவை சாதித்தார் பவுர்ணமி உற்சவதாரர் ஏ. வி. குமரன்மற்றும் சிவனடி யா–ர்கள், சிவதொ–ண்டர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்பர் இல்ல அறக்க–ட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் அர்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது.

    பவுர்ணமியை முன் னிட்டு பக்தர்களுக்கு மருத்து வம், சுகாதாரம்,குடிநீர், உணவு, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
    • தேரடிக்கு வந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பண்ருட்டி :

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரடிக்கு வந்த நடராஜர் தேரடியை சுற்றி பார்த்தார். அப்போது நடராஜருக்கு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று இரவு துவஜாஅவரோகனம் எனும் கொடி இறக்கமும் நடைபெறஉள்ளது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம்.
    • அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அஷ்டமி தோறும் சிறப்புவழிபாடுநடைபெறுவது வழக்கம். அதேபோல வளர்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் சாமி, அம்பாள் மற்றும் கால பைரவருக்கு  மஞ்சள்பொடி, திரவியபொடி, வில்வப் பொடி, அருகம்புல்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது.

    பின்னர் வடைமாலை மற்றும் செவ்வரளி மலர்அலங்காரத்தில் பைரவாஸ்டகம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனுக்காகவும் விளக்கேற்றி சாமிதரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு அஷ்டமி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுசெய்திருந்தனர். முன்னதாகவராகி அம்மன்சன்னதியில் சிறப்புவழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர்சிறப்புஅலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது.

    ×