search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி‌ஷ வாயு தாக்குதல்"

    குடியாத்தம் அருகே குடிநீர் தொட்டி சுத்தம் செய்த போது வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மயங்கி விழுந்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் சச்சின் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் தங்கம் நகர் 1-வது தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் உள்ள 15 அடி ஆழ தரை தள குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர்.

    கடந்த 2 நாட்களாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது தொட்டியை சுத்தம் செய்ய கெமிக்கல் ரசாயனத்தை பயன்படுத்தினர்.

    அந்த ரசாயனத்தில் இருந்து வெளியேறிய வி‌ஷ வாயுவினால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட நடராஜன் குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

    போலீசார் அவர்களை குடியாத்தம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #poisonousgasattack
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொள்கிறது. சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் ரஷியாவின் உதவிக்கொண்ட சிரிய அரசு அதுபோன்ற நடவடிக்கையை தொடர்கிறது. பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.  

    இந்த நிலையில் அங்குள்ள அலெப்போ நகரத்தில் வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால், அங்கு 107 பேர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 

    இது பற்றி சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறும்போது, ‘‘சுவாச பிரச்சினையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்தது. இந்த வி‌ஷ வாயு தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சொல்லப்படுகிறது. #poisonousgasattack
    கர்நாடக மாநிலம் ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் உள்பட 3 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் வி‌ஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.

    அவர்கள் கதி என்ன? என்பதை பார்க்க சென்னை பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் பாய்லர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மயங்கி விழுந்தார். 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை என்ஜினீயர் சரவணன், கோலார் மாவட்டம் முள்பாகலை சேர்ந்த லோகேஷ், ராமநகர் மாவட்டம் கொட்டிகேஹள்ளியை சேர்ந்த மகேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இன்னொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×