search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் உண்ணாவிரதம்"

    • காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது.
    • சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதிதாக ஜவ்வரிசி ஆலை தொடங்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.

    இதை கைவிட வலியுறுத்தியும், புதிதாக ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பெரியசாமி கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம், ஆனந்த், உதயகுமார், முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் குருசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது. இந்த பகுதியில் சேகோ ஆலை தொடங்குவதால் கால்வாயின் நீர்வழித் தடங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.

    மேலும் சேகோ ஆலையில் இருந்து வெளியாரும் கழிவினால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே இந்த சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    இதில் விவசாயி சங்க நிர்வாகிகள் இளங்கீரன், ராமமூர்த்தி தங்கவேல், வெற்றிமணி, பழனியப்பன் சந்திரமோகன், செல்வராஜ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
    • எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும்

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கும் பணியை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்த்தும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கட்டுமானங்கள், பழுதடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்க 2 தரப்பு விவசாயிகளும் ஒப்பு கொண்டனர்.

    ஆனால் சில இடங்களில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் பணி நடந்ததால் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஈரோடு அடுத்த வாய்க்கால் மேட்டில் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு, கருப்பு கொடியேற்றம், கோபி பகுதியில் இருந்து வாகனங்களில் பேரணி நடத்தினர். வணிகர்கள் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 7 நாட்களாக நடந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்து, பழைய கட்டுமானங்களை சீரமைக்க கோரியும், மண் கால்வாய்களை மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி 7 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு தரப்பில் அமைச்சர் முத்துசாமி எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும். எங்களை பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை செய்ய சொல்லியுள்ளோம். புதிய கட்டுமானங்களை அந்த பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக தேவையற்ற இடங்களில் கட்டுமானங்களை செயல்படுத்தக்கூடாது.

    எதிர்கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது பொதுமக்கள், விவசாயிகள் கருத்தை கேட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன.
    • சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரிகளும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரி களும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இவை அனைத்தும் ஜனவரி மாதம் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து குவாரிகளும் அரசின் கட்டு ப்பாட்டில் சென்றுள்ளது. இந்த குவாரியில் மழை நீர் மற்றும் அனைத்து கிணறுகளிலிருந்து வரக்கூடிய ஊற்று நீர் தேங்கி நிற்பதால்

    இதனை கல்குவாரியின் உரிமையாளர்கள் எம்சாண்ட், பி சான்ட், உள்ளிட்டவை களுக்கு பயன்படுத்த தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருகின்றனர்.

    இதனால் தங்களது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் இது குறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் இப்பகுதி விவசாயி ராமசாமி என்பவரது தோட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். குடிநீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, திருச்செங்கோடு பொறுப்பு டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட நேரில் வந்து போராட்டத்திலொ ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றியதால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

    • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் சுந்தரராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் ஏராளமான விவசாயிகள் கீழ்பாவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது.
    • மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறி வித்துள்ளது. இதற்காக மோகனூர் தாலுகாவில், அதிக அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடங்களில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சர்வே பணிகளை தொடங்கி உள்ளனர்.

    இப்பகுதியில், அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால், சிப்காட் அமைந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விளை நிலங்கள் பாழ்படும். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதால், இந்த திட்டத்துக்கு, அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழு ஆரம்பித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக, முட்டியிட்டு ஆர்ப்பாட்டம், கறவைமாடு ஒப்படைப்பு போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என, பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக வளையப்பட்டியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், விவசாயி கள் கலந்துகொண்டனர். 

    ×