search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரிகள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்
    X

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கல்குவாரிகள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு; விவசாயிகள் உண்ணாவிரதம்

    • எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன.
    • சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரிகளும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரி களும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இவை அனைத்தும் ஜனவரி மாதம் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து குவாரிகளும் அரசின் கட்டு ப்பாட்டில் சென்றுள்ளது. இந்த குவாரியில் மழை நீர் மற்றும் அனைத்து கிணறுகளிலிருந்து வரக்கூடிய ஊற்று நீர் தேங்கி நிற்பதால்

    இதனை கல்குவாரியின் உரிமையாளர்கள் எம்சாண்ட், பி சான்ட், உள்ளிட்டவை களுக்கு பயன்படுத்த தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருகின்றனர்.

    இதனால் தங்களது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் இது குறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் இப்பகுதி விவசாயி ராமசாமி என்பவரது தோட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். குடிநீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, திருச்செங்கோடு பொறுப்பு டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட நேரில் வந்து போராட்டத்திலொ ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றியதால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

    Next Story
    ×