search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பிரச்சார வாகனம்"

    • சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
    • சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வேளாண்மை துறையின் சார்பில் அந்தியூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (உட்ட மிகு சிறுதானியங்கள்)திட்ட த்தின் கீழ் திட்டம் குறித்தும் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தியூரில் திட்ட விளக்க வாகன பிரச்சா ரத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்திய அரசின் பரிந்து ரையை ஏற்று 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்ட ங்களை வகுத்துள்ளது. மேலும் பொது மக்களி டையே சிறு தானியங்கள் பயன்பாட்டி னை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திட்ட விளக்க விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்ட விளக்க வாகன பிரச்சாரத்தில், சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி, பணி வரகு ஆகிய ஊட்டமிகு சிறு தானியங்களின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மை களை பொது மக்க ளிடம் விளக்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    சிறுதானியங்களின் பயன்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

    மக்களிடம் மாறி வரும் நவீன உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படு கின்றது.இதனை தடுக்க சிறுதானி யங்களை அதி கமாக எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து வேளா ண்மை துறை யின் சார்பில் விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வரு கின்றது.

    சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை யை அதிகரிக்கும் நோக்க த்தில், சேர்க்கை கொண்டாட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்தியூர் கிழக்கு பள்ளியில் இருந்து பேரூராட்சி தலைவர் எம்.பாண்டி யம்மாள் பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர், பிரம்மதேசம், பள்ளிபாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் முடிவில் செல்லம்பாளையம் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.

    முன்னதாக அந்தியூரில் சேர்க்கை கொண்டாட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் சிவ ராமன், ஞானமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் மாதேசா, அபிராமி,

    வட்டார வளமைய மேற்பார்வை யாளர் லிங்கப்பன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    ஈரோடு:

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் தொடர்பாக திட்ட விளக்க பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு 2022-23ம் ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்கத்துப் பாதுகாப்புத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.91.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதன் ஒரு இனமாக சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரச்சார வாகனம் இயக்கப்படவுள்ளன.

    இந்த வாகனங்களில் சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானி யங்களின் சிறப்புகள், மானிய விவரங்கள், பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான ஒலி பெருக்கி விளம்பரங்கள் செய்யப்படுவதுடன், அவை தொடர்பான துண்டறிக்கைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படவுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    முன்னதாக, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த 8 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கஸ்தூரி,

    இணை இயக்குநர் (வேளா ண்மை) சின்னச்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர்கள் ஆசைத்தம்பி (வேளாண்மை), சண்முக சுந்தரம் (வேளாண்மை மற்றும்

    விற்பனை வணிகத்துறை), மரகதமணி (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை) சாவித்திரி (செயலாளர்- வேளாண் விற்பனை குழு), விஸ்வ நாதன் (செயற்பெறியாளர் - வேளாண் பொறியியல் துறை), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார்
    • பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளன

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் இன்று தொடங்கியது.

    மாவட்ட கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து வாகன பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 - ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் உலகம் முழுவ தும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தொடங்கிய தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வரு கிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவை யான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் அமைந்துள்ளன என்றார்.

    முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களால் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்த கண்காட்சி மற்றும் கோலக் கண்காட்சியினை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா , வன அலுவலர் இளையராஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×