search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Campaign Vehicle"

    • விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை யை அதிகரிக்கும் நோக்க த்தில், சேர்க்கை கொண்டாட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்தியூர் கிழக்கு பள்ளியில் இருந்து பேரூராட்சி தலைவர் எம்.பாண்டி யம்மாள் பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர், பிரம்மதேசம், பள்ளிபாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் முடிவில் செல்லம்பாளையம் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.

    முன்னதாக அந்தியூரில் சேர்க்கை கொண்டாட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் சிவ ராமன், ஞானமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் மாதேசா, அபிராமி,

    வட்டார வளமைய மேற்பார்வை யாளர் லிங்கப்பன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    ஈரோடு:

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் தொடர்பாக திட்ட விளக்க பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு 2022-23ம் ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்கத்துப் பாதுகாப்புத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.91.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதன் ஒரு இனமாக சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரச்சார வாகனம் இயக்கப்படவுள்ளன.

    இந்த வாகனங்களில் சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானி யங்களின் சிறப்புகள், மானிய விவரங்கள், பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான ஒலி பெருக்கி விளம்பரங்கள் செய்யப்படுவதுடன், அவை தொடர்பான துண்டறிக்கைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படவுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    முன்னதாக, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த 8 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கஸ்தூரி,

    இணை இயக்குநர் (வேளா ண்மை) சின்னச்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர்கள் ஆசைத்தம்பி (வேளாண்மை), சண்முக சுந்தரம் (வேளாண்மை மற்றும்

    விற்பனை வணிகத்துறை), மரகதமணி (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை) சாவித்திரி (செயலாளர்- வேளாண் விற்பனை குழு), விஸ்வ நாதன் (செயற்பெறியாளர் - வேளாண் பொறியியல் துறை), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
    • சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான தூய காற்றின் அவசியத்தை வலியுறுத்தி கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ந் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    வருகிற 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

    அதன்படி இந்த ஆண்டும் தூய காட்சி தினம் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான தூய காற்றினை நாம் அனைவரும் பெறுவோம் என்பதை வலியுறுத்தி கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனத்தையும் கலெக்டர் விஷ்ணு கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். பின்னர் தூய காற்றின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

    ×