search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "An awareness campaign"

    • சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
    • சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வேளாண்மை துறையின் சார்பில் அந்தியூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் (உட்ட மிகு சிறுதானியங்கள்)திட்ட த்தின் கீழ் திட்டம் குறித்தும் சிறுதானியங்களின் பயன்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தியூரில் திட்ட விளக்க வாகன பிரச்சா ரத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இந்திய அரசின் பரிந்து ரையை ஏற்று 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்ட ங்களை வகுத்துள்ளது. மேலும் பொது மக்களி டையே சிறு தானியங்கள் பயன்பாட்டி னை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக திட்ட விளக்க விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்ட விளக்க வாகன பிரச்சாரத்தில், சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி, பணி வரகு ஆகிய ஊட்டமிகு சிறு தானியங்களின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மை களை பொது மக்க ளிடம் விளக்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

    சிறுதானியங்களின் பயன்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

    மக்களிடம் மாறி வரும் நவீன உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படு கின்றது.இதனை தடுக்க சிறுதானி யங்களை அதி கமாக எடுத்து கொள்வதன் அவசியம் குறித்து வேளா ண்மை துறை யின் சார்பில் விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வரு கின்றது.

    சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது சிறுதானிய உற்பத்தியும் அதிகரிக்க கூடும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×