search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பரங்கள்"

    • தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
    • அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) அனைத்து வகையான திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது.

    18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் போதும், எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் விரும்பினால் யூ சான்றிதழை விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

    சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும்.
    • கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி–ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் என்பது முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்று, அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் பொறுப்பாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த வகை சங்கங்கள் மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின், மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ அல்லது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் நிர்வாக கட்டுப்பாட்டிலோ செயல்படுவது அல்ல.

    எனவே பொதுமக்களும், முதலீடுதாரர்களும் மேற்படி சங்கங்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வைப்புத்தொகையை முதலீடு செய்வது தொட–ர்பான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் நிதி இழப்பிற்கு கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய பதிவாளரோ அல்லது மாநில பதிவாளரோ இந்த வைப்பீடுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என http:www.olx.in என்ற வலைதள முகவரியில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிய நிரந்தர பணியாளர்கள் தேவை என்றும், மாத சம்பளமாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுவதாகவும், சேலம், பவானி, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளதாகவும், வயது 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் எனவும், தொடர்புக்கு 82203-03402, 95970-49997 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நெசவாளர்கள் மற்றும் டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பதிவு எண் டி.எண். 20-0001095 என்ற பெயரில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, இப்படி ஒரு சங்கம் கூட்டுறவுத்துறையின் கீழோ அல்லது கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழோ பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1988-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தப்பட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    மேலும், தற்போது வாட்ஸ் அப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி பெற்றால் நிரந்த பணி வழங்கப்படும என போலியான விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு உரிய முறையில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில், சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×